பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகத் தயாராகி வருவதாகக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் அடிப்படையற்ற வதந்திகள் என அவர் மறுத்துள்ளார்.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சராகப் பணியாற்றும் ஹரிணி அமரசூரிய எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, அவரது பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்வி மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் பாடப்புத்தக விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படும். இதில் தவறு எங்கே நடந்தது என்பது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாகத் திகழ்வதால், அவரை அரசியல் ரீதியாக வீழ்த்த எதிர்க்கட்சிகள் இத்தகைய பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அவரைப் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன.
ஹரிணி அமரசூரிய பதவி விலகப் போவதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை; அவர் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பார் என டில்வின் சில்வா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக