BREAKING
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாபா வங்கா கணிப்பு என பரவும் தகவல் – உண்மையா? குருப்பெயர்ச்சி 2026: 5 ராசிகளுக்கு சவால் என எச்சரிக்கை – உங்கள் ராசி இருக்கிறதா? தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு – மர்ம கும்பல் தாக்குதல் குருணாகலில் மர்ம சம்பவம் – ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 10 லட்சத்தை கடந்துள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாபா வங்கா கணிப்பு என பரவும் தகவல் – உண்மையா? குருப்பெயர்ச்சி 2026: 5 ராசிகளுக்கு சவால் என எச்சரிக்கை – உங்கள் ராசி இருக்கிறதா? தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு – மர்ம கும்பல் தாக்குதல் குருணாகலில் மர்ம சம்பவம் – ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 10 லட்சத்தை கடந்துள்ளது

இலங்கையில் கனமழை எச்சரிக்கை பல மாவட்டங்களில் வரை மழை பெய்ய வாய்ப்

இலங்கையில் கனமழை எச்சரிக்கை பல மாவட்டங்களில் வரை மழை பெய்ய வாய்ப்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று நிலை தொடரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"