தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பஜார் பகுதியில் நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் மீது மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, சம்பவத்தன்று டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த அவரை, அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நபரையும் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதால் தனிப்படை அமைத்து தேடுதல் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக