BREAKING
செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு

தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு மர்ம கும்பல் தாக்குதல்

தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு மர்ம கும்பல் தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பஜார் பகுதியில் நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் மீது மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, சம்பவத்தன்று டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த அவரை, அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நபரையும் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதால் தனிப்படை அமைத்து தேடுதல் நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"