மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், இதுவரை அறிவியல் ரீதியாக பதிவு செய்யப்படாத புதிய குரங்கு இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
செம்மஞ்சள் நிற உதடுகளும் கருப்பு நிற முகமும் கொண்ட இந்த அரிய குரங்கு இனத்தை, அப்பகுதி மக்கள் "லிக்வேலி" என்ற பெயரில் அழைத்து வருகின்றனர். அடர்ந்த காடுகளின் உயரமான மரங்களின் உச்சிப் பகுதிகளில் வாழும் இந்த உயிரினம் மிகவும் அரிதாகக் காணப்படுவதால், நீண்டகால ஆய்வுகளின் பின்னரே இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் தகவலின்படி, கடந்த 75 ஆண்டுகளில் ஆபிரிக்கக் கண்டத்தில் கண்டறியப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு இனமாக இது பதிவாகியுள்ளது. இதன் தனித்துவமான உடலமைப்பு, குரல் அமைப்பு மற்றும் மரபணு ஆய்வுகளின் அடிப்படையில், இது முற்றிலும் புதிய குரங்கு இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, ஆபிரிக்காவின் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஆய்வுகளில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், அரிய வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக