ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தொடர்பில் மூன்று நாள் பொதுத் துக்க நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெஹ்ரான் துணை மேயர் முகமது அமீன் தவாகோலிசாதே தெரிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சி செய்திகளின்படி, இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளன. மேலும், தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஏற்பட்ட பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு ஈரானின் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக