வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A-9 பிரதான வீதியில் நடந்த இந்த விபத்தில், வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னால் சென்ற காரை பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடந்துசென்ற இளைஞர்கள் மீது மோதியுள்ளது.
உயிரிழந்த இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களின் மகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக