BREAKING
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாபா வங்கா கணிப்பு என பரவும் தகவல் – உண்மையா? குருப்பெயர்ச்சி 2026: 5 ராசிகளுக்கு சவால் என எச்சரிக்கை – உங்கள் ராசி இருக்கிறதா? தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு – மர்ம கும்பல் தாக்குதல் குருணாகலில் மர்ம சம்பவம் – ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 10 லட்சத்தை கடந்துள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாபா வங்கா கணிப்பு என பரவும் தகவல் – உண்மையா? குருப்பெயர்ச்சி 2026: 5 ராசிகளுக்கு சவால் என எச்சரிக்கை – உங்கள் ராசி இருக்கிறதா? தூத்துக்குடியில் நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு – மர்ம கும்பல் தாக்குதல் குருணாகலில் மர்ம சம்பவம் – ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 10 லட்சத்தை கடந்துள்ளது

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A-9 பிரதான வீதியில் நடந்த இந்த விபத்தில், வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னால் சென்ற காரை பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடந்துசென்ற இளைஞர்கள் மீது மோதியுள்ளது.

உயிரிழந்த இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களின் மகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"