யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட நடராசா மயூரன் என்ற அதிபரே இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல்களின் படி, அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் வழக்கமான பயணிகள் படகை தவறவிட்டதையடுத்து, கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலைகளால் பலமாக அசைந்ததால் அதிபர் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக படகோட்டி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நடராசா மயூரன், புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் முன்னாள் அதிபராகவும், தற்போது நயினாதீவு கணேச மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளார். கல்வி மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பால், அவரது இழப்பு நயினாதீவு மற்றும் புங்குடுதீவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக