மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைகளின் தந்தை என கூறியிருந்தாலும், அவர் பயன்படுத்திய அடையாள அட்டை வேறு ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, குழந்தைகளை பயன்படுத்தி பல இடங்களில் யாசகம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் மற்றும் பிடியாணைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணம் தற்போது குற்றப்புலனாய்வு மற்றும் மோசடி விசாரணைகளுடன் இணைந்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
செய்திகள்
மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக