நாட்டின் நிதி துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, தங்கக் கடன்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (Loan-to-Value Ratio) 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள், சிறப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய தங்கக் கடன்களுக்கும், ஏற்கனவே உள்ள கடன்களின் புதுப்பிப்புகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
தங்கத்தின் மதிப்பீடு அதன் தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என்றும், கடன் வழங்கும் போது சரியான மதிப்பீட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை வங்கித்துறையில் அபாயங்களை குறைத்து, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக