Tamil Nadu அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான உரிமைத் தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் Joseph Vijay தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை திட்டத்தில் சில மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படுவதால், அதற்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன், தாமதம் ஏற்பட்டிருந்தாலும், மே மாதத்திற்கான தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தன. மேலும், கூடுதலாக ரூ.2000 கோடைக்கால சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதிலும், குடும்ப ஆதரவினை உறுதிசெய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக