சர்ச்சைகளுக்கு மத்தியில் காதல் குறிப்பு… Trisha பதிவால் மீண்டும் கிளம்பிய பரபரப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான Trisha, சமீபத்தில் பகிர்ந்த சமூக வலைத்தள பதிவு ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. குறிப்பாக, காதலை குறிப்பிட்டு அவர் வெளியிட்ட கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
சமீப காலமாக Vijay மற்றும் த்ரிஷா குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்பான தகவல்கள் வெளியாகிய பின்னர், த்ரிஷாவுடன் அவரை இணைத்து பல கருத்துக்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் Vijay கலந்து கொண்டபோது, அதே நிகழ்வில் Trisha அழகிய சேலையில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்த பதிவில், “காதல் எப்போதும் உரத்த குரலில் ஒலிக்கும்…” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த ஒரு வரி தான் தற்போது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. பல நெட்டிசன்கள், இந்த பதிவு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பதாகவும், மறைமுகமாக காதலை உறுதிப்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பே இவர்களை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், இந்த புதிய பதிவு அந்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை இருவரும் இந்த வதந்திகள் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காதது, ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால், Trisha வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக