தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுக்கு எதிராக முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குமார ஜெயக்கொடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பிரசாத் சிறிவர்தன சுமத்திய குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகால அனுபவம் கொண்ட தகுதியான பொறியியலாளரான குமார ஜெயக்கொடி, கறைபடாத நற்பெயரைக் கொண்டவர் என்றும், நிலக்கரி இறக்குமதி சர்ச்சையின் போது விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் அவராகவே முன்வந்து பதவி விலகியவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திட்டமிட்டுத் தனது கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் இப்பணத்தைச் செலுத்தத் தவறினால், நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது சட்டத்தரணி சம்பத் யாலேவத்த எச்சரித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக