தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தலைவர் விஜய் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விஜய்க்கு எதிராகப் பொலிஸில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் "சுயமாகவும் மகிழ்ச்சியாகவும்" தவெக-வுக்கு ஆதரவு கடிதம் எழுதியதாக ஒரு காணொளியை விஜய் தரப்பு வெளியிட்டது. ஆனால், அந்தக் கடிதம் போலியானது என்றும், தனது கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை என்றும் குற்றம் சாட்டிய தினகரன், ஆளுநரைச் சந்தித்து முறையிட்டார். விஜய் பதவி வெறியில் 'குதிரை பேரத்தில்' ஈடுபடுவதாகச் சாடிய தினகரன், நள்ளிரவில் கிண்டி உதவி ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்தார். இந்தத் திருப்பங்களுக்கு மத்தியில், மாயமானதாகக் கூறப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ் திடீரென தினகரனுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்து நேரில் விளக்கமளித்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்கவே தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தினகரன் இதன்போது உறுதிப்படுத்தினார். டிவிகே-வோ, தினகரனின் ஒப்புதலுடன்தான் காமராஜ் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. ஒரு எம்.எல்.ஏ-வின் ஆதரவைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல், தமிழகத்தின் ஆட்சி அமைக்கும் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த நள்ளிரவு அரசியல் மோதல் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அனலைக் கூட்டியுள்ளது.
செய்திகள்
"விஜய் பதவி வெறியில் இருக்கிறார்": அ.ம.மு.க எம்.எல்.ஏ விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் நள்ளிரவில் அதிரடிப் புகார்!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக