BREAKING
தலவத்துகொட உணவகத்தில் அதிகாலை திடீர் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு – எரிவாயு கசிவு காரணமா என விசாரணை வைரலாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பதிவு: ஸ்டாலின், கொளத்தூர் குறித்து பரபரப்பு கருத்து மரண அச்சம்? புடின் மகள்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு: பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு 5 நாட்களில் ரூ.265 கோடி வசூல் வேட்டை செய்த ராம் சரண் ‘பெத்தி’ திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனை 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! தலவத்துகொட உணவகத்தில் அதிகாலை திடீர் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு – எரிவாயு கசிவு காரணமா என விசாரணை வைரலாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பதிவு: ஸ்டாலின், கொளத்தூர் குறித்து பரபரப்பு கருத்து மரண அச்சம்? புடின் மகள்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு: பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு 5 நாட்களில் ரூ.265 கோடி வசூல் வேட்டை செய்த ராம் சரண் ‘பெத்தி’ திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனை 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது!

நிதி அமைச்சில் $. மில்லியன் இணையவழித் திருட்டு: சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிர விசாரணை - பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நிதி அமைச்சில் $. மில்லியன் இணையவழித் திருட்டு: சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிர விசாரணை - பிரதமர் ஹரிணி அமரசூரிய!

இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும் 'அமைதிக்கான நடைபயணத்தின்' மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (25.04.2026) கண்டியில் ஆரம்பமான நிலையில், அதில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்விடயத்தை உறுதிப்படுத்தினார். இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிய சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்படுவதை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலடி கொடுக்க அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான எதிர்க்கட்சி இருப்பது அவசியம் என்றாலும், தற்போதைய எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்படுகின்றனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"