Easter Attack Sri Lanka தொடர்பான கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுத் தாக்குதல் விவகாரத்தில், Suresh Salley மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சட்டத்தரணி Sanjeeva Weerawickrama தெரிவித்துள்ளார்.
குண்டுதாரியான முகம்மது ஹஸ்தூனுக்கு தேவாலயத்தின் இட விவரங்களை (grid location) சலே வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என அவர் விளக்கமளித்தார். ‘சுரேஷ் சலேவுக்கான நீதி’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், எப்பிஐ (FBI) வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கைகளையும் மேற்கோள் காட்டினார்.
அந்த அறிக்கைகளின் படி, தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் நாடு முழுவதும் பல “safe house” களை பயன்படுத்தியதுடன், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலேயே நீண்டகாலம் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தை அறிந்திருந்த குண்டுதாரிக்கு வெளிப்புறமாக grid location வழங்க தேவையில்லை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சலே மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்பட்டவையாக இருக்கலாம் எனவும், உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக