BREAKING
சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம் மூன்று மாத விரதத்துடன் கதிர்காமம் வந்த ஜப்பானிய பக்தர்கள்; முருக பக்தியில் நெகிழ்ச்சியான ஆன்மீக பயணம் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையின் தாக்குதல்; அம்பாந்தோட்டையில் மருமகன் உயிரிழந்த பரிதாபம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிப்பு; வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்வு 5 பிள்ளைகள் இருந்தும் ரூ. பில்லியன் கணக்கான சொத்துகளை தானமாக வழங்க விரும்பும் பிரெஞ்சு பில்லியனர்! சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம் மூன்று மாத விரதத்துடன் கதிர்காமம் வந்த ஜப்பானிய பக்தர்கள்; முருக பக்தியில் நெகிழ்ச்சியான ஆன்மீக பயணம் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையின் தாக்குதல்; அம்பாந்தோட்டையில் மருமகன் உயிரிழந்த பரிதாபம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிப்பு; வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்வு 5 பிள்ளைகள் இருந்தும் ரூ. பில்லியன் கணக்கான சொத்துகளை தானமாக வழங்க விரும்பும் பிரெஞ்சு பில்லியனர்!

புத்தலவில் சோகம்: காதல் தோல்வியால் வயது மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்!

புத்தலவில் சோகம்: காதல் தோல்வியால் வயது மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்!

மொனராகலை மாவட்டம், புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் வதிகே தசுன் மதுஷான் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தவர் என்பதும், மேலதிகக் கல்விக்காகத் தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த மாணவன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால், கடந்த சில நாட்களாக மதுஷான் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மாணவனின் சடலம் மரணப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த மாரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"