BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடசாலைகளுக்கு இன்று முதல் புத்தாண்டு விடுமுறை: மீண்டும் ஏப்ரல் -ல் திறப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் புத்தாண்டு விடுமுறை: மீண்டும் ஏப்ரல் -ல் திறப்பு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாளை (ஏப்ரல் 11) முதல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணையானது தொடர்ந்து ஜூலை 24, 2026 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறை முடிந்து பாடசாலைகள் ஆரம்பமாகும் போது மாணவர்கள் புதிய தவணைக்கான பாடத்திட்டங்களைத் தொடங்குவதற்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"