BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்கும் இந்த நீர்வெட்டு, இரவு 8:00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுக்க மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நீர் விநியோகத் தடை இன்று காலை 8:00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாலும், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை விளக்கியுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"