கொழும்பு செட்டியார்தெரு தங்க வர்த்தக நிலையங்களின் தகவல்களின்படி, இன்று (04.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 400,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. அதேவேளை, ஆபரணத் தங்கமான 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அண்மையில் 3 இலட்சம் ரூபா மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மிகக்குறுகிய காலத்தில் அதிரடியாக உயர்ந்து 4 இலட்சம் ரூபாவை எட்டியுள்ளது நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் +0.51% (+23.77 டொலர்கள்) வளர்ச்சியாகும். சர்வதேச சந்தையில் டொலரின் வலுவிழப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளே இந்தத் தொடர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் 24 கரட் தங்கம் 48,520 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 44,480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய உயர்வு சந்தையில் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக