இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கம், வர்த்தக அமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகள் எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்பட மாட்டாது என உறுதி வழங்கியுள்ளது.
சந்தையில் மூலப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின்பினரும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை தற்போதுள்ள விலைகளிலேயே இந்த இனிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக