BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

வயதிற்கு மேற்பட்டோருக்கு 'அஸ்வெசும' கொடுப்பனவு: இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

வயதிற்கு மேற்பட்டோருக்கு 'அஸ்வெசும' கொடுப்பனவு: இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், தகுதியுடைய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் இன்று (26) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி, முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நிதி நேரடியாக வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


தொடர்ந்து இரண்டாம் கட்டத்தின் கீழ், தகுதிபெற்ற மேலும் 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று முதல் தத்தமது வங்கிக் கணக்குகளின் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"