நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணமாக 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள், நாடு முழுவதும் உள்ள சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் வழியாக பொதுமக்களுக்குத் தரப்படவுள்ளது.
பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறியதாவது, “பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அத்தியாவசியப் பொருட்களை எந்த தட்டுப்பாடும் இல்லாமல் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.”
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக