அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் லொட்டரியின் வாராந்திர இணைய வழி குலுக்கலில், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற்ற சுற்றில் நான்கு பேர் தலா 200 கிராம் 24 காரட் தங்கம் வென்றுள்ளனர்.
இந்த குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் மற்றும் ஒரு பாலஸ்தீனியர் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 47 வயதான அன்சார் பூக்குஞ்சு, கடந்த 23 ஆண்டுகளாக துபாயில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் தனது 20 நண்பர்களுடன் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்துள்ளார். நீண்ட கால முயற்சிக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பரிசை உடனடியாக பயன்படுத்த திட்டமில்லை என்றும், தொடர்ந்து குலுக்கல்களில் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வயதான ராம்கி நடராஜன், கடந்த 10 ஆண்டுகளாக ஓமனில் வசித்து வருகிறார். விற்பனைத் துறையில் பணியாற்றும் அவர், தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் லொட்டரி வாங்கி வந்துள்ளார். வெற்றி செய்தி கிடைத்தபோது முதலில் ஆச்சரியமாக இருந்ததாகவும், பின்னர் அது மகிழ்ச்சியாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பரிசை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த மெரில் மேரி வில்சன் மற்றும் விமான நிலையத்தில் விருந்தினர் சேவைப் பணியில் உள்ள 41 வயதான பாலஸ்தீனியர் முகமது அஷூர் ஆகியோரும் தலா 200 கிராம் தங்கம் வென்றுள்ளனர்.
இந்த வெற்றிகள், நீண்ட காலமாக இணைந்து முயற்சி செய்து வந்த குழு லொட்டரி வாங்குதல்களின் பலனாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக