எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தால், விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, விநியோகக் கட்டணத்தை சுமார் 25% அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி தெரிவித்ததாவது, இந்த கோரிக்கை ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதை தொடர்பாக இன்று (26) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் விளக்குகையில், அண்மையில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விநியோகச் செலவுகள் அதிகரித்து உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை 101 ரூபாயால் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் விநியோகம் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும், அதனால் அந்த விநியோகக் கட்டணத்தை 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25% அதிகரிக்க வேண்டும் என சங்க செயற்குழு ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் தங்களை சிரமத்தில் விடாது என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக