யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் நேற்றைய தினம் காங்கேசன்துறைப் பிரிவு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சமைத்து உண்டு, மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பருத்தித்துறைப் பகுதியிலிருந்து அங்கு சுற்றுலா வந்திருந்த மற்றொரு குழுவினருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த பொலிஸார் அந்தச் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச உத்தியோகபூர்வ வாகனத்தைப் பயன்படுத்திச் சுற்றுலா சென்றமை, பொது இடத்தில் மேலாடைகள் இன்றி மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகக் கடுமையான திணைக்கள ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக