சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவடைதல் காரணமாக தங்கத்தின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையின் இந்தத் தாக்கத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கம் 340,400 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரு பவுண் 24 கரட் தங்கம் 370,000 ரூபாவாகக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது திடீரெனக் குறைந்துள்ளமை நகை வாங்குவோரிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக