முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகராகக் கடமையாற்றி வந்த 55 வயதுடைய அதிகாரி ஒருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இவர், நேற்று தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளார். முன்னதாக துணுக்காய் பிரதேச சபையிலும், தற்போது மாந்தை கிழக்கு பிரதேச சபையிலும் நீண்டகாலம் பணியாற்றி வந்த இவரது மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரது உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகள்
முல்லைத்தீவில் சோகம்: பாம்புக்கடிக்கு இலக்காகி பிரதேச சபை அதிகாரி உயிரிழப்பு!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக