உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (11.03.2026) நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. சிஐடி சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையின்படி, 2018-இல் வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் 2019 சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைச் சுரேஷ் சலே திட்டமிட்டுத் திசைதிருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகள்
சுரேஷ் சலேவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள்: கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடையாளம் காட்டியதாக சிஐடி அதிரடி அறிக்கை!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக