BREAKING
சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம் மூன்று மாத விரதத்துடன் கதிர்காமம் வந்த ஜப்பானிய பக்தர்கள்; முருக பக்தியில் நெகிழ்ச்சியான ஆன்மீக பயணம் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையின் தாக்குதல்; அம்பாந்தோட்டையில் மருமகன் உயிரிழந்த பரிதாபம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிப்பு; வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்வு 5 பிள்ளைகள் இருந்தும் ரூ. பில்லியன் கணக்கான சொத்துகளை தானமாக வழங்க விரும்பும் பிரெஞ்சு பில்லியனர்! சுரேஷ் சாலேவின் விடுதலையை கோரி கொழும்பில் போராட்டம்: அரசியல்வாதிகள் ஆதரவு, பாதுகாப்பு தீவிரம் மூன்று மாத விரதத்துடன் கதிர்காமம் வந்த ஜப்பானிய பக்தர்கள்; முருக பக்தியில் நெகிழ்ச்சியான ஆன்மீக பயணம் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையின் தாக்குதல்; அம்பாந்தோட்டையில் மருமகன் உயிரிழந்த பரிதாபம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிப்பு; வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்களிப்பு உயர்வு 5 பிள்ளைகள் இருந்தும் ரூ. பில்லியன் கணக்கான சொத்துகளை தானமாக வழங்க விரும்பும் பிரெஞ்சு பில்லியனர்!

முடி உதிர்வை குறைக்க மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கான இயற்கை முறைகள்

முடி உதிர்வை குறைக்க மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கான இயற்கை முறைகள்

பலருக்கும் பொதுவான பிரச்சனை முடி உதிர்வு. இதற்கான தீர்வாக, தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், போதுமான தூக்கம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தப்படலாம்.

இங்கே இரண்டு பழமையான மற்றும் சுலபமான இயற்கை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

இரண்டு எண்ணெய்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து சிறிது வெப்பமளிக்கவும்.

தலைமுடியின் உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

ஒரு மணி நேரம் ஊற விடவும்.

பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.

 வாரத்தில் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வளர்ச்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

காரணம்:

தேங்காய் மற்றும் விளக்கெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலைமுடி உதிர்வை குறைக்க உதவுகின்றன.

தேவையான பொருட்கள்:

வெங்காய சாறு – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவும்.

5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

30 நிமிடம் ஊற விடவும்.

பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.

வாரத்தில் 2 முறை பயன்படுத்தினால் முடி ஆரோக்கியம் மேம்படும்.

காரணம்:

வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு உதவும்.

தலை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வேர்களை வலுப்படுத்தும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"