பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவு இன்று (26) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவிற்காக 31 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 89 இலட்சத்து 3,75 பயனாளிகள் நன்மை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட தொகை இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றம் செய்யப்படும் என்றும், அதற்கான அனைத்து நிர்வாக ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடாந்திர மீளாய்வு நடவடிக்கைக்காக தங்களது தனிப்பட்ட தகவல்களை சரியான காலக்கெடுவில் புதுப்பிக்கத் தவறிய காரணத்தால், ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் அதிகமான நபர்கள் தங்களது நலன்களை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள், திட்டத்தின் பயனாளிகள் தங்களது விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பித்து, வழங்கப்படும் நலன்களை தொடர்ந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம், பெப்ரவரி மாத முதியோர் கொடுப்பனவு வழங்கல் நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக