செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில் Meta Platforms நிறுவனம், Advanced Micro Devices (AMD) நிறுவனத்திடமிருந்து பல பில்லியன் டொலர் மதிப்பிலான செமிகண்டக்டர்களை கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிப் தயாரிப்பு நிறுவனமான AMD-யில் மெட்டா ஒரு குறிப்பிட்ட பங்குகளைப் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Microsoft மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் ஏஐ துறையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ளவும், தன்னுடைய தரவு மையங்களை (Data Centers) நவீனப்படுத்தவும் மெட்டா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், செமிகண்டக்டர் சந்தையில் Nvidia நிறுவனத்தின் ஆதிக்கத்துக்கு முக்கிய சவாலாக அமையக்கூடும் என பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
AMD நிறுவனத்தில் பங்குகளைப் பெறுவதன் மூலம், மெட்டா தேவையான சிப்களை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதுடன், எதிர்கால ஏஐ சிப் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிலும் நேரடி பங்களிப்பு செய்யக்கூடிய நிலையைப் பெறும்.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பங்குச் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், AMD நிறுவன பங்குகளின் மதிப்பிலும் உயர்வு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக