Jaffna – Mandaitivu பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான Nalinda Jayatissa தெரிவித்தார்.
மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள இந்த மைதானத்துக்கான கட்டுமானப் பணிகளை, தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு Central Environmental Authority அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அமைச்சர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் கட்டாயமானவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளுடனும் இணைந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி விரைவில் நிறைவேற்றுவதே அரசின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக