Bandarawela – பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய, பல்லகெட்டுவ பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் வீடொன்றுக்கு அருகில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பல்லகெட்டுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதோடு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். சிசு கிடந்த இடத்திற்கு அருகிலிருந்த வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டபோது, குறித்த சிசு (17/02) அன்று தனக்கே பிறந்ததாகவும், பிறக்கும் போதே இறந்து பிறந்ததனால் தனது வீட்டின் முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், பின்னர் நாய் சடலத்தை வெளியே இழுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
சடலத்தை அவதானித்த நபர் ஒருவர் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் Batticaloa பகுதியில் உள்ள வாகனம் கழுவும் நிலையத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை Bandarawela Magistrate's Court இல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக Badulla General Hospital வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக