செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை வாடகை அல்லது குத்தகை வழங்குவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகன ஓட்டும் வெளிநாட்டவர்களை கண்டறிவதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்களை வழங்கும் வர்த்தகர் அல்லது வாகன உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2025ஆம் ஆண்டில், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஓட்டிய வெளிநாட்டவர்களின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 கடுமையான சாலை விபத்துகள், 78 சிறிய விபத்துகள் மற்றும் 6 சொத்து சேத விபத்துகள் பதிவாகியுள்ளன.
வெளிநாட்டவர்கள் வாடகை வாகனங்களைப் பெறும் முன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உறுதி செய்ய வேண்டும் என்று பொலிஸார் எச்சரிக்கையளித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக