BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு விடுதியை பேலியகொட பொலிஸார் சுற்றிவளைத்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

பேலியகொட பொலிஸ் பிரிவின் பண்டோலான சந்தி பகுதியில் இயங்கி வந்த குறித்த விடுதி, நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, அந்த விடுதியின் முகாமையாளராக பணியாற்றிய பெண்ணும், தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பகவந்தலாவ பகுதிகளை சேர்ந்த 21, 36 மற்றும் 47 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"