BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு விடுதியை பேலியகொட பொலிஸார் சுற்றிவளைத்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

பேலியகொட பொலிஸ் பிரிவின் பண்டோலான சந்தி பகுதியில் இயங்கி வந்த குறித்த விடுதி, நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, அந்த விடுதியின் முகாமையாளராக பணியாற்றிய பெண்ணும், தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பகவந்தலாவ பகுதிகளை சேர்ந்த 21, 36 மற்றும் 47 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"