கொழும்பு - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்த நான்கு பேரே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பயண முகவர் நிலையத்திற்குள் நுழைந்த சந்தேகநபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக