BREAKING
இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரியான குழந்தையின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (Postpartum Depression/Psychosis) காரணமாக இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த போது வீட்டிலேயே இருந்த குழந்தையின் தந்தை (தொழில் நுட்பப் பொறியியலாளர்), திடீரெனக் கிணற்றுப் பகுதியில் சத்தம் கேட்டதையடுத்து அங்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது தனது மனைவியும் குழந்தையும் கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனைவி கிணற்றிலிருந்த குழாய் ஒன்றின் உதவியுடன் மேலே ஏறி உயிர் தப்பிய போதிலும், 19 நாள் சிசு நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"