கேகாலை மாவட்டத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் இன்று காலை சுமார் 6.15 மணியளவில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 20 பேர் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக