BREAKING
சில பகுதிகளில் 100 mm-க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியன்மார் இணக்கம் ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வாலின் ஹாட் போட்டோஷூட்; இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உலகக் கிண்ண உரிமை விவகாரம்; FIFA-வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த UEFA சில பகுதிகளில் 100 mm-க்கும் அதிகமான கனமழை; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தவெகவில் இணையவில்லை; பரவும் தகவல்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்ட மறுப்பு மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியன்மார் இணக்கம் ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வாலின் ஹாட் போட்டோஷூட்; இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உலகக் கிண்ண உரிமை விவகாரம்; FIFA-வுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த UEFA

உணவு பரிமாற தாமதமானதால் மனைவியை கொலை செய்து தலையை மரத்தில் தொங்கவிட்ட கணவர் பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

உணவு பரிமாற தாமதமானதால் மனைவியை கொலை செய்து தலையை மரத்தில் தொங்கவிட்ட கணவர் பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான தகராறு கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் குனால் குமார் என்பவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனக்கு உணவு பரிமாறப்படுவதற்கு நீண்ட நேரம் ஆனதால் ஆத்திரமடைந்ததாகவும், இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கோடாரியால் தாக்கி அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைக்குப் பின்னர் மனைவியின் தலையை வீட்டின் முன்பிருந்த மரத்தில் தொங்கவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக குனால் குமாரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"