தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பொருட்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
26 வயதுடைய சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக