நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான அக்சர் படேல் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் 16-வது ஓவரை அக்சர் படேல் வீசினார்.
அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அடித்த ஒரு வேகமான 'ஸ்ட்ரைட் டிரைவ்' (Straight Drive) பந்தை அக்சர் படேல் தடுக்க முயன்றார்.
பந்து மின்னல் வேகத்தில் வந்து அவரது இடது கை ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது.
இதில் விரலில் பிளவு ஏற்பட்டு ரத்தம் கசிந்ததால், வலியால் துடித்த அவர் அந்த ஓவரை முழுமையாக முடிக்காமலேயே வெளியேறினார். மீதமிருந்த பந்துகளை அபிஷேக் சர்மா வீசினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக