ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோர் கடந்த வாரம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் முதலில் மாலைதீவுக்கு பயணம் செய்து, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவில் உள்ள ஆடம்பரமான உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்வில் பங்கேற்றதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச மாலைதீவிலிருந்து நேரடியாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விசேட உரையொன்றையும் ஆற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக மாலைதீவில் நடைபெற்ற திருமண நிகழ்விலும், பின்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிலும் நாமல் ராஜபக்ச பங்கேற்றிருந்தமை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக