BREAKING
‘அருள்வான்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியீடு – அருள்நிதி நடித்த படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்! அன்பே டயானா’ திரைப்படம் எப்படி? – முதல் விமர்சனமே செம்ம பாசிட்டிவ்! பாரி இளவழகன் மீண்டும் வெற்றிப்பாதையிலா? அர்ச்சுனா எம்.பி. நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை? – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் எச்சரிக்கை கொங்கோ தேசிய பூங்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு ‘அருள்வான்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியீடு – அருள்நிதி நடித்த படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்! அன்பே டயானா’ திரைப்படம் எப்படி? – முதல் விமர்சனமே செம்ம பாசிட்டிவ்! பாரி இளவழகன் மீண்டும் வெற்றிப்பாதையிலா? அர்ச்சுனா எம்.பி. நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை? – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் எச்சரிக்கை கொங்கோ தேசிய பூங்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

அத்துருகிரியையில் பேருந்து டிப்பர் மோதிய விபத்து: பேர் காயம், நீண்ட மீட்பு நடவடிக்கையின் பின் சாரதி காப்பாற்றப்பட்டார்

அத்துருகிரியையில் பேருந்து டிப்பர் மோதிய விபத்து: பேர் காயம், நீண்ட மீட்பு நடவடிக்கையின் பின் சாரதி காப்பாற்றப்பட்டார்

கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 4.15 மணியளவில், கொடகம – பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய ஜயந்தி மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி வாகனத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தும் டிப்பர் வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தையடுத்து குறித்த வீதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"