கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 4.15 மணியளவில், கொடகம – பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய ஜயந்தி மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி வாகனத்திற்குள் சிக்கியிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தும் டிப்பர் வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தையடுத்து குறித்த வீதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக