மறைந்த ஈரானியத் தலைவர் சையத் அலி கமெனிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், "WE Must Rise" (நாம் எழ வேண்டும்) என்ற தலைப்பில் மௌனப் போராட்டம் ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் நடைபெற்றது.
நேற்று (6) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வை "ஈரானுக்கான குரல்கள்" என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்றவர்கள் மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தியதுடன், ஒற்றுமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் அமைதியான போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த மௌனப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் அமைதியான முறையில் தங்களது கருத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக