காலி மாவட்டம் பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இரண்டு தனித்தனி கொலை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவருக்கு இருமுறை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முதல் வழக்கில், 2014 செப்டம்பர் 24ஆம் திகதி தனது உறவினர் ஒருவரை கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீண்ட கால விசாரணைக்குப் பின், 2026 பிப்ரவரி 17ஆம் திகதி பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இரண்டாவது வழக்கில், 2009ஆம் ஆண்டு தனது சொந்த சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிணையில் இருந்த நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.
2026 ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற விசாரணையில், அதே மேல் நீதிமன்றம் மீண்டும் அவரை குற்றவாளியாக அறிவித்து இரண்டாவது முறையாக மரண தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தில், சம்பவத்தின் போது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாகவும், இதில் அவரது சகோதரர் உயிரிழந்ததாகவும் சாட்சிகள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இரண்டு மரண தண்டனைகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி தற்போது வெலிக்கடை சிறையில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக