BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வ நிகழ்வு முன்னெடுப்பு

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வ நிகழ்வு முன்னெடுப்பு

Denmark நாட்டில், Mullivaikkal Remembrance Day நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, டென்மார்க்கின் Grindsted நகரில் அமைந்த தேவாலயத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக விசேட திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அருட்தந்தை Bjarke Friis தலைமையில் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டதுடன், தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவேந்தல் உரைகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்ததுடன், நீதி கோரும் குரல்களையும் வலுப்படுத்தியது.

நிகழ்வின் இறுதியில், முள்ளிவாய்க்கால் நினைவாக தயாரிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பற்றிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

இந்த வகையான நினைவேந்தல் நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் வரலாற்றை மறக்காமல், எதிர்கால தலைமுறைகளுக்கு அதனை எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"