மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் இடம்பெற்ற துயரமான முச்சக்கர வண்டி விபத்தில் 4 வயதுடைய சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது பெற்றோருடன் நேற்று இரவு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், சிறுவனின் பெற்றோரும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக