யாழ்ப்பாணம் சுன்னாகம் - புத்தூர் வீதியிலுள்ள தொடருந்து கடவை மார்க்கத்தை அவசரமாகத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளதால், எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வடக்கு தொடருந்து வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ அறிவித்துள்ளார். இதற்கமைய, நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை இத்தொடருந்து கடவை முழுமையாக மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக, அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்துகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக