யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்ற 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த சுவந்தன் திவ்யா என்ற இளம் யுவதி, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நிலையில் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன யுவதி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0773828845 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக