தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக இலங்கை மற்றும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்கு திரும்ப முயன்றபோது குடியேற்றத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும், மற்ற இருவர் கனடா மற்றும் அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் குடியுரிமை சட்டங்கள் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக